top of page

சிங்கப்பூர் மலையாளிகள்

சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையமும் தேசிய நூலக வாரியமும் சில மலையாளி அமைப்புகளும் இணைந்து சிங்கப்பூர் மலையாளி சமூகத்தைப்பற்றிய ஒரு சிறப்பு அறிமுக நிகழ்ச்சியைப் படைத்தன. சிங்கப்பூர் மலையாளிகள் இந்திய சமூகத்தின் ஒரு பிரிவினர் . அவர்களுடைய பண்பாடு வளமிக்கது. அதே சமயம், பலதரப்பட்டது. மலையாளிகளின் பண்பாட்டு நடைமுறைகள், கலைப்பொருட்கள், நடனம், இசை, தனித்துவமான உணவு எனப் பலவேறு அம்சங்களை இந்நிகழ்வின் மூலம் பார்வையாளர்கள் அவதானிக்க முடிந்தது. அவர்களுக்கென்றே ஒரு தனித்துவம் இருந்தபோதும், சிங்கப்பூர்ப் பண்பாட்டு நீரோட்டத்தில் கலந்து நம் பண்பாட்டு வளத்திற்குப் பலம் சேர்க்கும் சமூகமாக மலையாளிகள் இருக்கிறார்கள். 


சிங்கப்பூர் இந்தியர்களுள் மலையாளிகள் இரண்டாவது பெரிய சமூகம். சிங்கப்பூர் ஆங்கிலேயர்களின் காலனியாக இருந்த காலந்தொட்டு அவர்கள் இங்கு வாழ்ந்துள்ளனர். ராஃபிள்ஸ் 1819இல் வருவதற்கு முன், சிங்கப்பூரில் ஒரு மலையாளி முஸ்லிம் கல்லறை இருந்தது குறித்து உங்களுக்குத் தெரியுமா? அவர்களுள் தொழிற்சங்கவாதிகள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், கலைஞர்கள் எனப் பல்வேறு துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டுத் தமக்கென ஓர் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளனர். அச்சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் சிங்கப்பூர் அதிபரானார் – அவரே திரு. சி. வி. தேவன் நாயர்!


இந்த நிகழ்ச்சியை இரு காணொளிகளாகப் படைத்திருக்கின்றோம். முதல் பகுதியில், இந்நிகழ்ச்சியின் முக்கிய ஒருங்கிணைப்பாளரான முனைவர் அனிதா தேவி பிள்ளையின் அறிமுக உரை, பண்பாட்டுக் காட்சிப்பொருள்கள், பாரம்பரிய நடனம் ஆகியன இடம்பெற்றுள்ளன. பார்க்க: https://youtu.be/ophQwUgQmBY


இரண்டாம் பகுதி, பேச்சாளர்கள் தங்களுக்குள் கருத்தாடுவதையும் பார்வையாளர்களோடு உரையாடுவதையும் காட்டுகிறது. பார்க்க: https://youtu.be/tue-_47Q8LM

Singapore Malayalees.png
Projects
திட்டங்கள்

“நானும் தமிழும்” என்னும் காணொளித் தொகுப்பில் தமிழ் அல்லாத பிற துறைகளில் சிறந்து விளங்குகின்ற 10 வல்லுநர்கள், தமிழ்மொழி எவ்வாறு தங்கள் வாழ்விலும் பணியிலும் முக்கியப் பங்காற்றியுள்ளது என்பதைப் பகிர்ந்துள்ளனர். 

Naanum Thamizhum.png

இந்தப் பகுதி, தமிழ்ப் பண்பாடு, வரலாறு குறித்து பரவலாக அறியப்படாத ஆர்வத்தைத் தூண்டும் பல்வேறு தகவல்களைத் தாங்கி வருகிறது. முதல் தொடர், நவீன ஐரோப்பாவுடன் உள்ள தமிழர்களின் தொடர்பு குறித்த தகவல்களைத் தரும்.

 

உங்களுக்குத் தெரியுமா?

 

சிந்தனைக்கு விருந்து

தமிழும் பண்பாடும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவை. குறிப்பாக, நம் எதிர்காலத் தலைமுறையினர் சிங்கப்பூரில் தமிழ் மரபையும் பண்பாட்டையும்  கட்டிக்காக்க அவற்றைச் சரிவரத் தெரிந்துவைத்திருக்க வேண்டும். அதற்குத் தமிழ்மொழி அறிவும் ஆற்றலும் இன்றியமையாதவை. அந்த அடிப்படையில் அமைந்ததே இத்தளம்.

logo.png

சிங்கப்பூரின் 50-வது ஆண்டு சுதந்திர விழாவை முன்னிட்டு, 1965 முதல் 2015 வரையில் பதிப்பிக்கப்பட்ட மின்வடிவமாக்கப்பட்ட சுமார் 350 சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய நூல்களின் தொகுப்பைத் தேசிய நூலக வாரியத்தின்  BookSG  இணையத் தளத்திலும் பொதுமக்கள் காணலாம்.

DASTL.PNG

கூடுமானவரை கடந்த கால நாடகத்துறை பற்றிய தகவல்களை ஆவணப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம். சிங்கப்பூரின் பன்மொழி நாடகச்சூழலில், தமிழ் நாடகங்கள் பற்றிய பரந்த பார்வையை உருவாக்குவதில் இத்தொகுப்பு முக்கியப் பங்கு வகிக்கும்.

Drama.jpg
ஊடகம்
Media
படங்கள்
காணொளி
75.jpg
நாளும் ஒரு கவிதை  Oli 96.8 FM நேர்காணல்

நாளும் ஒரு கவிதை Oli 96.8 FM நேர்காணல்

Play Video
வானொலித் தொகுப்பு
உரைகள்
சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின்
தொடக்க விழா

திரு அருண் மகிழ்நன், இயக்குநர்,
சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம்

இன்றைய தினம் -- 2019ம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 6ம் தேதி -- சிங்கப்பூருக்கு,  குறிப்பாகத் தமிழர்களுக்கு, வரலாற்றுச் சிறப்பு​மிக்க ஒரு நாள்...

ஒலி 96.8FM நேரலை நிகழ்ச்சியில் நமது உறுப்பினர்கள்  முனைவர் இளவழகன் முருகனும், ஜெயசுதா சமுத்திரனும் கலந்து கொண்டனர். சிங்கப்பூர்த்  தமிழ்ப் பண்பாட்டு மையத்தின்  குறிக்கோள்கள், முயற்சிகள் மற்றும் எதிர்வரும் திட்டங்களைப்  பற்றிப் பகிர்ந்து கொண்டனர். இவர்களுடன் சுஷ்மா சோமா நம் அமைப்போடு இணைந்து படைத்த “நாளும் ஒரு கீதம்” எனும் அண்மைய இசைத்தொடரைப் பற்றிப்  பேசினார்.

CSTCLogo.png

இந்தச் சின்னம் எட்டுப் பெரிய, சிறிய அம்புகளாலும் மூன்று அடிப்படை வண்ணங்களாலும் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழில் எண்திசை என்னும் சொல் எல்லாத் திக்குகளையும் குறிக்கும். தமிழ்ப் பண்பாடு என்பது  எல்லாத் திசைகளிலிருந்தும் வந்த பெரிதும் சிறிதுமான தாக்கங்களால் உருவானதே. அதேபோன்று எல்லாத் திசைகளிலும் அதன் ஊடுருவலையும் காணலாம். எட்டு அம்புகளையும் இடைவெளிகளோடு சித்திரித்திருப்பதற்குக் காரணம், தமிழ்ப் பண்பாடு தனது எல்லைகளை ​முற்றிலும் மூடிக்கொண்டு உறைந்து போய்விட்ட கலாச்சாரமாக இல்லாமல் என்றென்றும் துடிப்போடு விளங்கும் பண்பாடாகப் பரிணமித்திருக்கிறது என்பதுதான். சிவப்பு, பச்சை , நீலம் ஆகிய மூன்று ஆதார நிறங்களே ஆயிரமாயிரம் வண்ணங்களுக்கு மூலம். அதேபோன்று, ஒரு பண்பாட்டின் பல்வேறு வெளிப்பாடுகளுக்கும் அதன் ஒருசில விழுமியங்களே அடிப்படை.

bottom of page