
உங்களுக்குத் தெரியுமா? (தொடர்)
இந்தப் பகுதி, தமிழ்ப் பண்பாடு, வரலாறு குறித்து பரவலாக அறியப்படாத ஆர்வத்தைத் தூண்டும் பல்வேறு தகவல்களைத் தாங்கி வருகிறது. முதல் தொடர், நவீன ஐரோப்பாவுடன் உள்ள தமிழர்களின் தொடர்பு குறித்த தகவல்களைத் தரும்.
சிங்கப்பூரின் 56வது தேசிய தினமாகிய இன்று (9 ஆகஸ்ட் 2021), இந்த இரண்டாவது தொடரை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம். இத்தொடரில், வட இலங்கையில் பண்டைக் காலத்தில் வாழ்ந்த தமிழ்க் குடிகள் பற்றிய வரலாற்றைக் காணலாம். ஓவியங்களிலும் கட்டடக் கலைகளிலும் உறைந்திருக்கும் அந்த வரலாற்று நுணுக்கங்களை இத்தொடர் படம் பிடித்துக் காட்டுகிறது.
முதல் தொடரைத் தொகுத்த அதே முனைவர் சுரேஷ்குமார் முத்துக்குமரன்தான் இதனையும் படைக்கிறார். சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழக விரிவுரையாளரான இவர், சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் உறுப்பினருமாவார்.
"ஐரோப்பாவும் தமிழ் உலகமும்" தொடரைத் தொகுத்தவர் முனைவர் சுரேஷ்குமார் முத்துக்குமரன். சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழக விரிவுரையாளரான இவர், சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் உறுப்பினருமாவார்.